ராமாயணப் பதிப்புகளில், ஒன்று வால்மீகி பக்கம் அல்லது கம்பன் பக்கம் என ஆசிரியர்கள் போயிருப்பர். இரண்டையும் கலந்தாலோசித்து எழுதப்பட்டுள்ள நுால்.
முதலில் வால்மீகி சொல்வதை சுவைபடச் சொல்வார்; அடுத்து கம்பன் பக்கம் சுவாசிப்பார். இரண்டிலும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவது தான் நோக்கம். மாமரங்களின் பலம் எத்தகையது என்பதை விறுவிறுப்பூட்டும் வகையில் கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லியுள்ளது.
ஒரு பெரும் இழப்பை, பெண்ணால் சரி செய்ய முடியும் என்பதை விறுவிறுப்பு குறையாமல் எழுதியுள்ளார். இந்த இரட்டை ராமாயண நுால் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று என்பது நுாலின் சுவையிலிருந்து புரிகிறது.
– தி.செல்லப்பா