இளைய சமுதாயத்தின் மீது மிகவும் பரிவும், அக்கறையும் கொண்ட மூத்த ஆன்றோர்கள் தம் அரிய முயற்சியால் இளைஞர்களை நல்வழி நோக்கி திசை மாற்றும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர். அவற்றில் ஒன்று, பண்டைய நுால்களில் சொல்லப்பட்டிருக்கும் சீரிய நற்குணங்களை கதைகளாக்கி, ஆர்வத்தை ஈர்த்து இளைஞர்கள் மனதை திருத்தி அமைப்பதாகும். இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த நுால்.
பசிக்கு உண்ண வேண்டுமானால் முன்கூட்டியே சமையல் பொருட்களை தயார் செய்து கொள்வதுபோல, நிம்மதியான நிறைவுக்கு இறையருளையும் இளம்வயது முதலே சேகரித்துக் கொள்ள வேண்டும் என்று உரைக்கும் நுால்.
– பிரபு சங்கர்