அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,சென்னை-14.
இந்நூலில் பல நாட்டு நீதிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நீதிக் கதைகள் சுவையாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு இக்கதைகளை எடுத்துக் கூறும்போதும் குழந்தைகள் இவற்றை தாங்களாகவே படித்து இன்புறும் போதும் இக்கதைகளில் அடங்கியுள்ள நீதி நெறிகள் படிப்பவர் மனதில் பசுமரத்து ஆணிப் போல பதிந்துவிடும்.
இக்கதைகளை சொல்லியிருப்பவர் தமிழகம் நன்கு அறிந்துள்ள எழுத்தாளர் பசுமைக்குமார். சிறந்த நூலாசிரியர் விருது உள்பட பல சிறந்த விருதுகளைப் பெற்றவர். வாசகர் உலகம் வழக்கம்போல் இந்நூலைப் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.