வெளியீடு: குமரன் பதிப்பகம்,19 கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம்: 112)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களைச் சந்தித்து அவர்களின் பொது வாழ்க்கை அனுபவங்களை நூலாசிரியர் இதில் தொகுத்து
வழங்கியுள்ளார்.இந்நூலில் இடம் பெற்றிருக்கும் சிவராமனின் வாழ்க்கை, படிப்போரின் கண்களைக் கலங்கச் செய்யும். பொது வாழ்க்கையில் எத்தகைய தியாகத்தை சிவராமன் எதிர்கொண்டார் என்பதற்கும் இந்த தேசத்திற்காக கம்யூனிஸ்டுகள் சிந்திய ரத்தத்திற்குச் சான்றாகவும் சிவராமனின் வாழ்க்கை அமைந்திருக்கிறது