தமிழறிஞர் ரா.பி. சேதுப் பிள்ளை சூட்டிய பெயர் அமுதசுரபி. இதழ் மட்டுமல்ல, இயக்கம்... என்ற கருத்தை வலுப்படுத்த அடுத்த 11 இதழ்களும் வெளிவரும் என்று ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் உறுதி கூறியிருக்கிறார்.
"இருண்மைக் கவிதைகள்' பற்றி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கருத்து, "காயத்ரி மந்திரமே கண்' என்ற ஈற்றடி கொண்ட வெண்பா போட்டியை தேர்வு செய்து கிரேசி மோகன் தன் மரபுக் கவிதை ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா என்று பல சிறப்பான படைப்புகளும் சிறப்பை சேர்க் கின்றன.