எம்.லட்சுமி நாராயணன், `பிரகதீஷஸ்' 41,கணபதி கவுண்டர் வீதி, நல்லாம் பாளையம், கோவை-641006. (பக்கம் : 64)
பூகம்ப அரக்கனை ஒழிக்க முடியாவிட்டாலும் ஒடுக்குவதில் பாரதம் முன்னிலை வகிக்கும் என்ற கருத்தில் எழுதப்பட்ட நூல். பூகம்ப விசை பக்கவாட்டில் கட்டடத்தை அசைக்கிறது. அதை முழுவதும் சமாளிக்க வழி என்ன. பழைய கட்டடங்களை மாற்றியமைக்க முடியுமா? புதிய கட்டடங்களை பூகம்ப பாதிப்பில் இருந்து காக்க வழி என்ன என்று கட்டடக்கலை அம்சங்களுடன் விளக்கியிருப்பது நூலின் சிறப்பாகும். அதற்கான வரைபடங்களும் இதில் உள்ளன. ஆசிரியரின் விழிப்புணர்வு முயற்சிக்கு பாராட்டுதல்கள்.