முகப்பு » இலக்கியம் » அவ்வையாரின் நீதி நூல்கள்

அவ்வையாரின் நீதி நூல்கள்

விலைரூ.120

ஆசிரியர் : டி.இ.எஸ்.ராகவன்

வெளியீடு: ஆர்.ஆர். பப்ளிகேஷன்ஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
ஆர்.ஆர். பப்ளிகேஷன்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-5. போன்: 2844 4425. (பக்கம்: 132.)

பள்ளிப் பாடங்களில் கணினி, சுயகலைகள் என பல புதுப்புது அம்சங்களின் ஆக்கிரமிப்பால், நீதி நூல் பாடங்கள் போதுமான அளவு இடம் பெறவில்லை. தமிழ் தவிர்த்த மற்ற மொழிகளில் வசீகரிப்பு, தனியார் தொலைக்காட்சிகளின் கார்ட்டூன் படங்கள், இளம் மாணவர்களின் செம்மையான நடத்தைக்கு சரிவர வித்துக்களை சேர்க்கின்றனவா? என்பது ஐயப்பாட்டிற்குரியது.இந்நிலையில், வளர்வதற்கு தமிழ் மூதாட்டியின் மணியான நீதிகளை இந்தி, சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் கற்றுத் தெளிய ஆசிரியர் இந்நூலை காணிக்கையாக்குகிறார். அருமையான பணி.`ங'ப் போல் வளை (பக்.5) எழுத்துப் பட்டியலில் `ங' என்ற ஒரு எழுத்தைப் பயன்படுத்த அதன் சுற்றமான அனைத்து வரிசையும் இடம் பெறுகிறது. இதுபோல `சுற்றம் தழுவி இரு' இதை தமிழில் புரிய வைப்பது கடினம். அதற்கும் அழகான விளக்கம் தந்துள்ளார்.இப்படி அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நீதி நூல்கள் இடம் பெறுகின்றன. ஆசிரியப் பெருந்தகையோர் போன்ற பல்மொழி வல்லுனர்களால் தான் நம் நாட்டு அரிய சாத்திரங்கள் அகிலத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் சென்று சேர்ந்து சிறப்பெய்த வேண்டும்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us