/ கதைகள் / அழல் மகுடம் (பாகம் – 1)
அழல் மகுடம் (பாகம் – 1)
பழங்கால வரலாற்று குறிப்புகளுடன் உருவாக்கப்பட்ட நாவல் நுால். ஊதா நிறமி என்ற திரவத்தை முன்வைத்துள்ளது. துவக்கத்தில் கதை முன்னோட்டம், நாவல் பெயர் காரணம், கதைமாந்தர்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ரோமாபுரியிலிருந்து சேரநாட்டு முசிறிக்கு கொண்டு வர, ஊதா நிறமிக்காக கடற்கொள்ளை யருடன் நடக்கும் மோதல்கள் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. வஞ்சகம், சூழ்ச்சி, சதி, பகை, போர்கள், அடிமைகள், கொடூரங்கள், கொலைகள் என பலவும் வருகின்றன. சாளுக்கிய அரசர்களின் வாதாபி, கதையில் பல இடங்களில் நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளன. பழங்கால வரலாறு சார்ந்த பயனுள்ள செய்திகளும் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்பான வரலாற்று நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




