/ வரலாறு / மண்ணை அளந்தவர்கள்
மண்ணை அளந்தவர்கள்
பக்கம்: 72 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை அளந்து, எகிப்தியர்கள் அதைப் பதிவு செய்திருக்கின்றனர். கி.பி.300ல் ரோமில் நில அளவை நடந்ததற்கான குறிப்பு காணப்படுகிறது. அட்லஸ் எனப்படும், நில வரைபடத்தை,முதன் முதலில் பாபிலோனியர்கள் உருவாக்கியிருக்கின்றனர். கிரேக்க வானியல் அறிஞர் டாலமி முதன் முதலில், பூமியைக் கோள வடிவில் வரைந்துள்ளார். இந்தியாவின் முதல் பெரிய நில அளவை, சென்னையில் இருந்து தான் தொடங்கியது. அதுவும், புனித தாமஸ் மலையில் இருந்து தான் தொடங்கியது;முதலான பல செய்திகளைத் தருகிறது இந்நூல். வரலாறு நில அளவை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள், இந்த நூலைக் கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுத் தான் கீழே வைப்பார்கள்.