/   கவிதைகள் / நவமணி                      
நவமணி
காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியை போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு நுால். ஒன்பது கவிஞர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. சந்திரசேகரேந்திரரின் 80ம் ஆண்டு நிறைவின் போது உருவாக்கப்பட்ட கவிதைகள் நவமணி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், முதல் மணியை கோர்த்தவர் கி.வா.ஜகந்நாதன். உலக குரு நாமத்தை கிளிக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. ஒன்பது வகை பிரபந்த பாடல்கள் எளிதில் புரியும் உரையுடன் உள்ளன. சுவாமிகளிடம் திருநீற்றை துாதாக விடுவதாக பாடல்களை புனைந்துள்ளார் சொ.மீ.சுந்தரம். அதற்கு காரணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் எழுதி தொட்டிலில் தாலாட்டுவது தனி அழகுடன் உள்ளது. மரபுக் கவிதை எழுத விரும்புவோருக்கு வழிகாட்டும் நுால். – புலவர் ரா.நாராயணன்




