/ கதைகள் / நதிக்கரைக் குறிப்புகள்

₹ 180

உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பன்றி வளர்க்கும் தொழில் செய்தவர், மருத்துவராக முன்னேறியதை, ‘சன்னாசி’ கதை காட்டுகிறது. யாரையும் குறைத்து மதிப்பிடாதீர் என்கிறது. சம்பவம் ஒன்றாக இருந்தாலும், குற்றச்சாட்டுகள் பலவிதமாக இருக்கும் என்பதை, ‘தீ’ கதை பகிர்கிறது. பொருள் குவிப்பது தீய கலாசாரம் என்றாலும், அதனுள் உணர்வான பின்புலத்தை கூறுகிறது. கதைகள் குடும்ப நிகழ்வுகளை நேரலையாக கண்முன் விரிக்கின்றன. மனிதனின் குணங்கள், புளியமர விதையை விட சிறிது என்கிறது. கவுரவம், பிடிவாதம் குடும்பத்தை சீர்குலைக்கும் என எச்சரிக்கிறது. எளிய கதாபாத்திரங்கள் வழியாக மனிதனின் பல்வேறு குணங்களை வெளிப்படுத்தி காட்டும் நுால்.–டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை