உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ரசிகமணி டி.கே.சி, சாவி, பி.வி.பார்த்தசாரதி, புத்தகப் பித்தன், மௌனி குறித்த நினைவுகள், பார்வைகள் இத்தொகுப்பிற்கு வளம் சேர்க்கின்றன.