முகப்பு » இலக்கியம் » இலக்கியங்களில் வழிபாடுகள்

இலக்கியங்களில் வழிபாடுகள்

விலைரூ.80

ஆசிரியர் : டி.செல்வராஜ்

வெளியீடு: அமராவதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:228)

மனிதர்கள் பிரம்மம், தெய்வம், பூதம், பிதிர், மானிடம் என, ஐந்து வகையான யாகங்கள் செய்ய வேண்டும் என்று முன்னோர் கூறுவர். இதில் தெய்வ வழிபாடும், பிதிரர் வழிபாடும் பெரும்பாலோர் இன்றும் செய்து வருகின்றனர். இந்நூல் இவ்விரண்டு வழிபாடுகளின் விவரங்களையும், மேன்மைகளையும் விவரித்துக் கூறுகிறது. பசுக்களை வழிபடுவதன் விவரங்களும் (பக் 24-36), நாகவழிபாட்டின் விவரங்களும் (பக் 82-101) ஆறு சமயங்களுக்கும் உரிய தெய்வங்களை ஐயப்பன் பக்தர்கள் வணங்குகின்றனர் என்று விளக்குவதும் (பக் 121-129), சித்திரகுப்தன், காக்கை, திருவிளக்கு ஆகிய வழிபாடுகளை விளக்குவதும் படிப்போர்க்கு மிகவும் பயனுள்ள செய்திகள். பல இலக்கிய நூல்களிலிருந்தும் மேற்கோள்களை ஆசிரியர் சுட்டிக்காட்டி விளக்குவது, அவரின் அகன்ற அறிவின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us