முகப்பு » வரலாறு » சோழர்கள் (புத்தகம்-1)

சோழர்கள் (புத்தகம்-1)

விலைரூ.600

ஆசிரியர் : கே.ஏ.நீலகண்டசாஸ்திரி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
ஆசிரியர்- கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர், சென்னை-600 098. பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன.இத்தகு சிறப்புடைய வரலாற்றில்,சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது. சோழர்கள்ப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல்,அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.சோழர் காலத்தின் முழுமையான வரலாறு,சோழப் பேரரசின் ஆட்சிமுறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை,வாணிபம்,தொழில், விவசாயம், நிலஉரிமை,கல்வி,சமயம், கலை,இலக்கியம் ஆகியவற்றைப் பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் ஆய்ந்தமைந்த சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us