முகப்பு » ஆன்மிகம் » கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்

விலைரூ.50

ஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்

வெளியீடு: முக்கடல்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அதில் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நூல் இது. திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்ப நாயனாரின் பிறப்பிடமான பொத்தப்பி நாடும், காளத்தி மலையும் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கின்றன என்பதையும், வேட்டுவர்களின் வாழ்க்கையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
வேட்டுவச் சிறுவர்களுக்கு வில் வித்தை துவங்கும் போது,  அக்காலத்தில் இருந்த சடங்குகளையும், நடைமுறைகளையும் அப்படியே சேக்கிழார் வழிநின்று விளக்கியுள்ளார் முகிலை இராசபாண்டியன். தலைநகர் தமிழ்ச் சங்கத்தில் அவர் நடத்தும் பெரிய புராண தொடர் சொற்பொழிவில் வெ ளியான நூல் என்பதற்கு இதற்கு கூடுதல் சிறப்பு.
முகிலை இராசபாண்டியனின் சரளமான மொழி நடையில் அமைந்திருக்கும் இந்த நூல், கண்ணப்ப நாயனார் வரலாற்றை உள்ளது உள்ளபடி எளிமையாக அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் உதவும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us