முகப்பு » இலக்கியம் » வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாடும் கம்பராமாயணமும்

வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாடும் கம்பராமாயணமும்

விலைரூ.420

ஆசிரியர் : முனைவர் கோ.புஷ்பவள்ளி

வெளியீடு: காவ்யா

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அனைத்து வகை இலக்கியங்களுக்கும் வாய்மொழி இலக்கியங்களே அடிப்படை என்பதை முன்வைத்து, மில்மன் பாரி-லார்டு அறிமுகப்படுத்திய வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டின் வழியில் கம்பராமாயண யுத்த காண்ட வரிகளைப் பொருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஆய்வு நுால்.
யுத்த காண்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாடல்களைக் கருத்தில் கொண்டுள்ளது பெரும் உழைப்பை காட்டுகிறது. வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டின் தோற்றம், கருத்தாக்க நிலைப்பாடுகள், வாய்பாடுகள் குறித்த அறிஞர்கள் முன்வைத்த வரையறைகள், வாய்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
கம்பராமாயணத்தின் வாய்ப்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பாரி கூறும் வாய்பாட்டு கூறுகளின் அடிப்படையில் அடைமொழிகளும் பிற அடியளவு வாய்ப்பாட்டுக் கூறுகளும் கம்பராமாயணத்தில் பொதிந்திருப்பது வெளிக்கொணரப்பட்டுள்ளது.
காப்பிய ஓட்டத்தில் மாந்தர்கள் மற்றும் பொருட்களுக்கு வரும் பல அடைமொழிகள் வாய்பாடுகளாகப் பொதுமை அடைந்துள்ள வகைமையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பாடல்களில் இடம் பெற்றுள்ள முன் அரையடி, பின் அரையடி, முழுவடி, தொகுதித் தொடர் வாய்பாடுகள் வகை பிரித்து ஆய்ந்து தரப்பட்டுள்ளன.
இறுதியில் ஆய்வு முடிவுகளும், பிற்கால ஆய்வுக்கான களங்களும் தரப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நுால்.
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us