இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி என்னும் திட்டத்தைக் கொண்டு வர இயலாது என்னும் உண்மையை ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ள நுால். இந்தியாவில் பாயும் நதிகளை இணைத்து ஒரே நாடு என்னும் உணர்வை கட்டமைக்க முடியும் என்னும் சிந்தனையையும் விதைத்துள்ளார்.
தேர்தலை எப்படி நடத்த வேண்டும், ஓட்டுச்சாவடிகளை எப்படி அமைக்க வேண்டும், ஓட்டுச்சீட்டுகள் எப்படி அச்சடிக்கப்பட வேண்டும் என்பது போன்ற புதிய பார்வை கொண்ட திட்டங்களை முன்வைத்துள்ளார். வரவேற்கத்தக்க ஆலோசனைகளை நாட்டுக்கு வழங்கும் அற்புத நுால்.
– முகிலை ராசபாண்டியன்