பிரிட்டிஷ் படையை எதிர்த்து, 29 வயதில் வீர மரணமடைந்த ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நுால். பெண்களின் வீரத்தை வெளிக்காட்டியவர். ஜான்சி ராணி வாழ்ந்த காலங்களில், பெண்களை ஆண்கள் அடக்கியே வைத்திருந்தனர்.
அந்தக் காலத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்மணியான ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள, இந்நுால் மிகவும் உதவுகிறது. இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரில் பங்கேற்ற மிக முக்கியமான நபர்களில் ஜான்சி ராணி ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறு வடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி அறிய உதவுகிறது.
– வி.விஷ்வா