பண்டைய காலத்திலேயே கணிதம், வானியலில் பல மகத்தான சாதனை புரிந்த மேதைகள் இந்தியாவில் வாழ்ந்தனர் என்பதும்; இந்தியா ஒரு கணித பாரம்பரிய நாடு என்பதும், இந்நுாலை படித்து முடித்த பின் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம்.
அந்த அளவிற்கு கணித வளர்ச்சிக்கு இந்திய மேதைகள் ஆற்றிய பணிகள், கண்டுபிடிப்புகளை பட்டியலிட்டுள்ளார் நுால் ஆசிரியர். அன்றைய போதாயனர் துவங்கி, மாமேதைகளான பாணினி, ஆர்யபட்டர், வராகமிகிரர், ராமானுஜர் என விரிந்து, 1930, 1040களில் வாழ்ந்த எம்.எஸ்., நரசிம்மன், ரகுநாதன் வரை 32 மேதைகளின் அரிய தகவல்களை இந்நுாலில் பகிர்ந்து உள்ளார், ஆசிரியர். கணிதப் பிரியர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
– வியாஸ்