இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச்சுட வந்துள்ள நுால். செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என குறிப்பிட்டு, உண்மைத் தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார்.
ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் பின்னணி விசாரணையை நீதிமன்றத்தில் பார்ப்பது போல தோன்றுகிறது. கொலையானவரின் வாழ்க்கை நிகழ்வுகள் சிறு குறிப்பாக இருப்பதால், புத்தக திரையில் சினிமா பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது.
புத்தகம் படித்த பிறகு தான் தெரிந்தது, மொத்தத்தில் தீர்ப்புகளை தாங்கி வந்த புதிய வார்ப்புகள்.
– ஸ்ரீனி