வீடுகளில் புகுந்து மக்களை கொல்லும் ஒரு சிறுத்தையை வேட்டையாடிய சாகச அனுபவத்தை விவரிக்கும் நுால். பள்ளி மாணவ, மாணவியர் படிக்கும் வகையில் எளிய நடையில் உள்ளது.
காட்டில் நடந்த மயிர் கூச்செறியும் சாகசங்கள் பதிவாகி உள்ளன. வேட்டையாட போனவரையே சிறுத்தை பின்தொடரும் காட்சி நடுநடுங்க வைக்கிறது. இமயமலையில் கங்கை உருவாகும் காட்சி தத்துரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. கதைக்குள் கதையாக சம்பவங்கள் உள்ளன.
ஒரே மூச்சில் படிக்கும் சுவாரசியம் மிக்கது. அந்த சிறுத்தையே பின்தொடர்ந்து வருவது போல் திகில் ஏற்படுத்துகிறது. காட்டின் அழகு, அந்த சூழலில் வாழும் மக்கள் மற்றும் விலங்குகள் பற்றிய படிப்பினையை தரும் நுால்.
– கண்ணன்