குழந்தைகள் மனதில் நற்கருத்தை விதைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால். அன்பு மற்றும் பண்பான கருத்துக்களை, 36 தலைப்புகளில் அமைத்துள்ளது.
நிலத்தை பண்படுத்தி விதை போடுவது போன்ற கருத்துக்களை உடையது. சிந்திக்கும் ஆற்றல், வரலாற்று அறிவை பெறுவது, பெரியோரை போற்ற வேண்டியது, சுற்றுச்சூழலை காக்க வேண்டிய பொறுப்புகளை உணர்த்தி படைக்கப்பட்டுள்ளது.
சந்தம் பொங்க, ‘நன்று கருதி வாழ்ந்தால் நாடும் வீடும் புகழ்ந்திடுமே’ என எளிமையாக மனதில் தங்கும் வகையில் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மொழி சிறப்பு, பொறுப்பான செயல்களை கண்முன் நிறுத்தும் வகையில் அமைந்த தொகுப்பு நுால்.
– ஒளி