இருமுடி

விலைரூ.360

ஆசிரியர் : ஜி.வி.ரமேஷ் குமார்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தையா, தெய்வமா, அவதாரமா, சித்தரா... அய்யப்பனைப் பற்றி இப்படி ஒரு சிந்தனை ஓடாத உள்ளங்களே இல்லை. இந்த கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நுால். மலையாளத்தில் எழுதப்பட்ட நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கொலைகள், ஆக்கிரமிப்பு முயற்சி என, கிரைம் ஸ்டோரியாக நகர்கிறது. கிரிக்கெட்டின் கடைசி பந்தில் ஆறு ரன் எடுக்க பேட்ஸ்மேன் தயாராக நிற்க, நாற்காலியின் நுனிக்கே வந்து விடும் பார்வையாளனின் படபடப்பு எல்லார் நெஞ்சிலும் அடிக்குமே... அந்த உணர்வு கதை நகர்த்துதலில் உள்ளது.

சிவ, விஷ்ணுவின் மகனே சாஸ்தா என்ற வரலாறு தான் பெரும்பாலானவர்கள் அறிந்த ஒன்று. அவர் மனிதப்பிறவி எடுத்து வந்த போது தான் அய்யப்பன் என்ற பெயர் பெற்றார் என்றும் சொல்வர். தாய்க்காக புலிப்பால் கொண்டு வந்த தகவலை அறிவோம்.

ஆனால் பிறப்பிலேயே அய்யப்பன் புலிகளோடும், மற்ற மிருகங்களோடும் விளையாடி மகிழ்ந்தது, அவருக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்று புதுப்புது தகவல்களுடன் நாவல் நகர்கிறது. நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், இதைப் படித்த பின் நம்புவர் என எண்ண வைக்கிறது ஒரு அத்தியாயம்.

‘எதிர்ப்பக்கத்தில் காயம் ஏற்படுத்தாமல், நம் கோபத்தை தீர்க்க வேண்டும்’ என்ற அய்யப்பனின் கொள்கை வழி சென்றால் பாரதம் பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தை வாசகர்கள் மனதில் விதைக்கிறது. பக்தி, கிரைம், அரசியல், தேசப்பற்று என அனைத்து விதைகளும் இந்த நுாலில் துாவப்பட்டுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய அற்புதப் படைப்பு.

-– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us