மதுரை வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில் புனையப்பட்ட நாவல் நுால். ராணி மங்கம்மாள் மக்களுக்காக செயல்பட்டதை கூறுகிறது.
உளவு பார்க்க வந்த ஜீவாலா, ராணி மங்கம்மாள் தோழியாக, நம்பிக்கைக்குரியவராக இடம் பிடித்தாள். ராணிக்கு நெருக்கமான பங்காரு அம்மாளை ஓரம் கட்டினாள். வேண்டிய பணிப்பெண்களை நியமித்து அதிகார பலத்துடன் உலா வந்தாள்.
அவளது தம்பியும் அதிகார துஷ்பிரயோகம் செய்தான். இந்த அட்டகாசங்கள் ராணிக்கு தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டாள். பின், பாதுஷா திட்டப்படி சதி வலைக்குள் ராணி மங்கம்மாளை தள்ளினாள். ராணியின் அந்திமக்காலம் மிகவும் ரகசியமாக முடிந்ததை விறுவிறுப்புடன் சொல்லும் நாவல் நுால்.
– புலவர் சு.மதியழகன்