ஒரு காமுகனின் அழுக்கு மூட்டையைச் சுமக்க சபிக்கப்பட்ட நிரபராதியான அந்த பாவப்பட்ட இளையவன் ஒருவன் இரத்தத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைனர்கள் பிறந்தார்கள். அவர்கள் விடாப்பிடியாக வெளிநாட்டுப் பெண்களை வலைவீசிப் பிடித்தார்கள். வெளிநாட்டுக் குடும்பங்களை கலக்கினார்கள். அதனால், பாண்டவபுரம் வெளிநாட்டுக்காரர்களுக்குஒரு சிம்ம சொப்பனமாகிவிட்டது... ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே முடியாது.எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக்கொண்டே இருக்கும் படைப்பு இது.