முகப்பு » பொது » விலங்குகளைப் பற்றிய வியத்தகு செய்திகள்

விலங்குகளைப் பற்றிய வியத்தகு செய்திகள்

விலைரூ.45

ஆசிரியர் : இராம.சுந்தரம்

வெளியீடு: குட் புக் பப்ளிகேஷன்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
குட் புக் பப்ளிகேஷன், மணிமேகலைப் பிரசுரம், (பக்கம்: 88).

விலங்குகள் தொடர்பான பல செய்திகளைத் திரட்டி சிறுவர் - சிறுமியருக்குப் புரியும் வண்ணம் அழகு தமிழில், எளிமையாக படங்களுடன் ஆசிரியர் தந்துள்ளார்.

கரடி, பூனை, ஓநாய், நாய், வாத்து, மர நாய், முயல், பாம்பு, எலி, ஆடு, ஒட்டகம், திமிங்கலம், காட்டுப்பன்றி, யானை, குரங்கு, எறும்பு, கரையான், சிலந்தி, குளவி, தும்பி என்று உயிரினங்கள் பற்றிய பல வியத்தகு செய்திகளை 37 தலைப்புகளில் ஆசிரியர் தந்துள்ளார்.

பூனையிடம் வளரும் எலிகள் (பக்.11), சூழ்நிலைக்கு தக்கபடி வாழ கற்கும் நெருப்புக் கோழி (பக்.14), பாம்பு கண்டு சிறையான குரங்கு (பக்.20), உப்பை உண்ணும் நெருப்புக் கோழி - அணில், முயல், எலிகள் (பக்.25), 40 அடி தூரம் பாயும் மான்கள் (பக்.29), ஒநாய், கரடி, மரநாய், செந்நாய், நரி ஒன்று சேர்ந்து வாழும் மிருகக்காட்சிசாலை (பக்.34), காக்கையின் விடாமுயற்சி (பக்.42), மிருகங்களின் தொலை தூரப் பார்வை (பக்.61) இப்படிப் பற்பல வியத்தகு செய்திகளால் விலங்குகளைப் பற்றித் தெரிய வருகின்றன.

சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வது, சமபந்தி போஜன ஒற்றுமை, முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது, தற்காப்பு, விடா முயற்சி என்ற பல செய்திகள் விலங்குகள் மூலம் மனிதன் அறிய வேண்டிய பாடம்.

மனிதனும், விலங்கு தான். இவனைப் பற்றிய வியத்தகு செய்திகள் ஏதும் இல்லாமையாலே இடம் பெறவில்லையோ! மனிதனின் முன்னோடிகளான ஆஸ்ட்ரஸோபிதகஸ், ஹோமோ எரெக்டெஸ், பிதிகேன் திரோபஸ், நியேட்டர்தால் என்பவர்களின் பெயர் குறிப்பு (பக்.54), இடம் பெற்றுள்ளதைத் கண்டு நிறைவு கொள்ளலாம்.

நல்ல தொகுப்பு. பள்ளி நூலகங்களில் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us