முகப்பு » இலக்கியம் » தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு

விலைரூ.140

ஆசிரியர் : தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

வெளியீடு: முல்லை நிலையம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
எந்த இலக்கிய வரலாற்றையும் போல் அல்லாமல், புது இலக்கிய வரலாறாக தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் படைக்கப்பட்டது இந்த நூல். மொழியையும், இலக்கியத்தையும் மிக எளிமையாக நமக்கு உணர்த்துகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்றாலும் அவையும் மனிதனால் படைக்கப்பட்டவை என்ற உண்மையை  உணர்த்தி, நம்மை அவற்றிற்கு மிக அருகில் அழைத்துச் செல்லும்  தன்மை கொண்டு விளங்குகிறது. திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரும் மனிதர், நாமும் மனிதர் என்னும் ஒற்றுமையை முதலில் விளக்கி, பின்னர் வேற்றுமைக்குள் அழைத்துச் செல்கிறது.

பண்டைய இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்களாகப் பாதுகாத்து நமக்கு கொடுத்த மரபினைச் சேர்ந்தவர்கள் பாணர்கள் என்றும் அந்தப் பாணர்கள், பறை அறைவோர் முதலானோர் தற்காலத்தில் இழிவாகக் கருதப்படுவதையும் தெளிவுபடுத்துகிறார் தெ.பொ.மீ.,
நான்கு நிலப்பிரிவு ஐந்து நிலப்பிரிவுகளாக பிரிவானது, ஐந்து திணைப்பிரிவு ஏழுதிணைப்பிரிவானது முதலான திணைச் செய்திகளை, நுணுக்கமாக ஆராய்வதுடன் எளிமையாக தருவது இந்த நூலின் சிறப்பு.

எத்தனை தமிழ் இலக்கிய வரலாறு நூல்களைப் படித்திருந்தாலும், இந்த நூலை படித்தால் புதிய அனுபவத்தைப் பெற முடியும் என்பது உறுதி.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us