முகப்பு » பொது » பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

விலைரூ.180

ஆசிரியர் : ச.சு.இளங்கோ

வெளியீடு: பாரி நிலையம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது. ஆயிரம் தலை வாங்கியில் ஒரு காட்சி. பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இடம்.
நீதிகேது: இன்னும் படிக்க வைக்க வேண்டும்.
மங்கை: கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு  என்ன வேண்டும்?
கணவன் மேல் அன்பு.
நீதி: பெண்களுக்கு வேண்டுவது அன்பு. பின்பு? வேறு ஒன்றும் வேண்டாமா? பெண்கள் அரசு செய்வது விரசமா?
போர் செய்யட்டுமே யார் வேண்டாம் என்பார்? காவியம் வரைந்தால் பாவி என்பார்களா? ஓவியம் வரைந்தால் ஒப்பாதா உலகம்? தொழில் புரிந்தால் எழில் போய்விடுமா? மங்கையர்க்கரசி, அரிவையர் அன்பு செய்யவும் கல்வி வேண்டும்.
மங்கை: அவளை மணக்க வரும் அரச குமாரர்கள் அஞ்சுவார்கள். அவள் அதிகம் படித்தால்!
நீதி: படிக்காதவன் அஞ்சுவது சகஜம் தானே? அன்றியும் எனக்குப் பின் இந்நாட்டை ஆள்பவள் என் மகள் அல்லவா? பாரதிதாசனின் திரைத்தமிழ் நம்மைப் பரவசப்படுத்துகிறது!
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us