முகப்பு » இலக்கியம் » வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்

விலைரூ.150

ஆசிரியர் : சி.வி.மலையன்

வெளியீடு: மேகலா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, ‘தினமலர்’ முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். ‘மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை’ எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், ‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான்கண் படின்’ எனும் குறட்பாவிற்கு, தான் அரிதின் முயன்று ஈட்டிய, 80 கோடி ரூபாயை, தன் சொந்த கிராமத்திற்கு  வழங்கிய டாக்டர் பற்றிய செய்தியையும், ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ எனும் குறட்பாவிற்கு ஓர் ஆட்டோ ஓட்டுனரின் தமிழ்த்  தொண்டையும் சான்றாக காட்டுகிறது இந்த நூல்.
புலவர்.சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

Ashokan Subbarayan - Chennai,இந்தியா

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள்-எத்தனை கோடி சேர்த்தாலும் அவன் அருள் இல்லையெனில் அனுபவிக்க முடியாது எண்ணிலடங்கா அரசியல் வாதிகள் (கனிமொழி, ஜெ- சில எகா)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us