முகப்பு » கட்டுரைகள் » எண்ணுகிறேன்... எழுதுகிறேன்...

எண்ணுகிறேன்... எழுதுகிறேன்...

விலைரூ.155

ஆசிரியர் : டாக்டர். நா. மகாலிங்கம்

வெளியீடு: ராமானந்த அடிகளார் அறக்கட்டளை

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின், 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். ‘காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு’ என்பது முதல், ‘வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய’ என்ற கட்டுரையோடு, 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது.
மகாலிங்கம், அவ்வப்போது, ‘ஓம் சக்தி’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல். கட்டுரைகள் அனைத்திலுமே, அருட்செல்வரது நாட்டுப்பற்று, ஆன்மிகச் சிந்தனை, ஆழ்ந்த அறிவியல் கண்ணோட்டம், பரந்துபட்ட உலகறிவு, சமுதாய அவலங்களையும், வன்முறைகளையும் கண்டு கசிந்துருகும் உளப்பாங்கு, தெளிவாக தெரிகிறது.
கடந்த, 1949களில் காஷ்மீரின் நிலை – ஐ.நா.,வின் செயல்பாடுகளில் உள்ள பலவீனங்கள் – தென்னக நதிகள் இணைப்பில்லாமல் தொடரும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை சாடும் கோபம் – என, பல பிரச்னைகளை சாதக பாதகங்களோடு விளக்கி, மிக
அற்புதமாக பதிவு செய்துள்ளார்.
குமரய்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us