முகப்பு » கதைகள் » பொன் அந்திச் சாரல் நீ (நாவல்)

பொன் அந்திச் சாரல் நீ (நாவல்)

விலைரூ.100

ஆசிரியர் : ஸ்ரீஜா வெங்கடேஷ்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.  நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். ‘பொன் அந்திச்  சாரல் நீ’ என்ற அவர் எழுதிய நாவல், ஒரு தவறான தொலைபேசி அழைப்பால், ஒரு குடும்பம்  சிதைவதையும், அதற்கு காரணமான மருத்துவரான தன் தாய்மாமனுக்காக, கதாநாயகன்  தன் வாழ்க்கையையே தியாகம் செய்வது பற்றியும் பேசுகிறது.
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவல்,  ‘நின்னையே நதியென்று’ – கீழ்தட்டுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,  வாழ்க்கையில் பெரிய பணக்காரியாக வேண்டும்; அதற்கு ஒரே வழி, பணக்காரக் குடும்பத்து இளைஞனைக் காதலிப்பது தான் என்ற எண்ணத்தில், தான் பெரிய அரசு  அதிகாரியின் மகள் என்று பொய் சொல்லி காதலிக்கிறாள்
கதாநாயகி. வித்தியாசமான காதல் கதை. ஸ்ரீஜா வெங்கடேஷ் நாவல்களில், உரையாடல்கள் சிறப்பாக அமைந்து,  வாசகர்களைச் சுண்டி இழுக்கின்றன. பெண்களின் வலிகளும், ரணங்களும்,  சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டு, படிப்போரின் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. நல்ல  குறு நாவல்கள்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us