முகப்பு » கட்டுரைகள் » புதுவை வரலாற்றுச் சுவடுகள்

புதுவை வரலாற்றுச் சுவடுகள்

விலைரூ.170

ஆசிரியர் : நந்திவர்மன்

வெளியீடு: சேகர் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘பெரியார் பெருவாழ்வும் புதுச்சேரியும்’ என, துவங்கி, ‘சின்னச் சின்னச் செய்திகள்’ முடிய, 34 கட்டுரைகள் மூலம், புதுச்சேரியின்  வரலாற்றோடு தொடர்புடைய பல பெருமக்களின் சுவடுகள் இதில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அன்னை தெரசா, நான்கு முறை புதுச்சேரிக்கு வந்துள்ளார் (பக்.50); இந்திய விடுதலைக்கு போராடியவர்களுக்கு, புதுச்சேரி புகலிடமாக அமைந்தது; அரவிந்தர், சீனிவாசாச்சாரியார், பாரதியார், நீலகண்ட சாஸ்திரி, வ.வே.சு.அய்யர் என, வ.உ.சிதம்பரனார் வரையிலான தொடர்பும் விவரிக்கப்பட்டுள்ளது.
‘புதுவை வேதபுரீஸ்வரர் மீது இலக்கணப்பிழை இல்லாமல் வெண்பாக்களால் வேதபுரீஸ்வரர் பதிகம் பாடினார் (பக். 142) நாராயணகுரு; அரவிந்தர் ஆசிரமத்தில், 22 ஆண்டுகள் வாழ்ந்து, வடலூர் வள்ளலார் மீது பற்று ஏற்பட்டு, ‘மகாத்மா வள்ளலார்’ என்ற புத்தகத்தை (பக்.155) எழுதினார் சுத்தானந்த பாரதியார்; உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியத்தை 1102 பக்கங்களில் உருவாக்கிய மலேசிய தமிழ்க்குயில் கலியபெருமாள் (பக்.118); செஞ்சி முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் கடற்கரையில் எட்டு கல்தூண்கள் நிறுவப்பட்டன (பக்.209)’  இப்படி பல தகவல்கள், இதில் அடக்கம்.
பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us