முகப்பு » கதைகள் » பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

விலைரூ.150

ஆசிரியர் : தஞ்சைசெல்வன்

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாவலின் கதாநாயகி பூவரசி எழுந்து, வராந்தாவின் பக்கம் போய்  நின்று, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மேல்  பார்வையைப் பதிக்கிறாள். ‘இந்த அழகான நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே உலா வரும்  பூமிப்பந்தின் மேல் வசிக்கும் மனிதர்களுக்கு, இப்படியெல்லாம் கூட  துன்பங்கள் வருமா?’ என்று யோசிக்கிறாள். (பக். 203)
மிகவும் நல்லவளான பூவரசிக்கு பல சோதனைகள். அவளை தன் மோச  வலையில் சிக்க வைக்க முயல்கிறான் ஒரு தீயவன். கடைசியில் தர்மம் வெல்கிறது.  நாவலில் ஆங்காங்கே சிந்தனைச் சிதறல்கள். ‘சாலை மறியல் என்பதும் ஒரு வன்முறை தானே? மதம் சம்பந்தப்பட்ட கலவரம் மட்டும் தான் தீவிரவாதமா? இதுவும் ஒரு தீவிரவாதம் தானே?’ (பக்.59)  என்று கேட்கிறார் தஞ்சை செல்வன். அருமையான கள வர்ணனைகள்.‘பொழுது சாய, மெரீனா கடற்கரை மின்னொளியை, பொன் நகையாய்  அணிந்து கொள்ள ஆரம்பித்த நேரம்’ (பக்.162) அழுத்தமான உரையாடல்கள், ஆழம் மிக்க பாத்திரப் படைப்புகள்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us