இது ஒரு வித்தியாசமான கதம்ப நூல் எனலாம். பக்த பிரஹலாதன் சரித்திரத்தை, எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவருக்கே உரிய சிறப்பு நடையழகுடன், ஐம்பது பக்கத்திற்கு மேல் வடித்தெடுத்திருக்கிறார். சுவையான புராணக் குறுநாவல் போன்று அமைந்துள்ளது.
பத்திரிகை எதிலும் எழுதப்படாத பாலகுமாரனின் எழுத்தோவியங்களின் தொகுப்பான இந்நூலில் உள்ள விஷயங்கள், மயிலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் சத்சங்க வெளியீடான ஜெயந்தி மலரில் இடம்பெற்ற பிரத்யேக எழுத்துக்களாகும்.
பாலகுமாரனின் கதைகளில் உள்ள சில சுவாரஸ்யமான செய்திகளை, அவரின் வாசகி திருமதி பாக்கியலட்சுமி தேர்ந்தெடுக்கத் தொகுத்துள்ளார். திருவிளையாடல் புராணச் செய்திகள் ஒன்றிரண்டும், யோகி ராம்சுரத்குமார் பற்றிய பாலகுமாரனின் எழுத்துச் சித்திரமும், கேள்வி–பதில் பகுதி ஒன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
கவுதம நீலாம்பரன்