நாரதர் என்றவுடன், அவர் பெரும் கலகக்காரர், புராணகால மாந்தரிடையே சண்டை மூட்டிவிடுபவர், கோள்மூட்டுவதே அவருடைய தொழில் என்பதான எண்ணம் பலருக்கும் எழுவது இயல்பு. அதன் அடிப்படையிலேயே தமிழில் சில திரைப்படங்களும் வந்து விட்டன.
ஆனால், நாரதர் கோமாளியோ, கோள்மூட்டியோ அல்ல. தந்திரக்காரரோ, பிறரை இழிவுபடுத்துபவரோ அல்ல.
மிகச்சிறந்த மகரிஷி, இசை வல்லுனர். தாமும் நல்வழி நடந்து, பிறரையும் நல்வழி நடக்கச் செய்பவர். பக்திக்கு ஒரே சிறந்த உதாரணம் நாரதர். நாரதரைச் சரியாகப் புரிந்துகொள்வோர், வாழ்வில் உயர்ந்து சிறப்புகளை அடைவர் என்று, பல்வேறு புராண நிகழ்வுகளை
எடுத்துரைத்து நிறுவுகிறார், எழுத்தாளர் பாலகுமாரன். சுவாரசியமான ஆன்மிக நூல்.
– கவுதம நீலாம்பரன்