முகப்பு » கட்டுரைகள் » இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

விலைரூ.70

ஆசிரியர் : ச.சுப்பாராவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆங்கில நாவல்கள் குறித்து, ‘புத்தகம் பேசுது’ இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன.
‘திரில்லர்’ நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய, ‘கோமா’; அடுத்து, மருத்துவ துறையின் மோசடி குறித்து எழுதிய, ‘டெத் பெனிபிட்’ நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞான கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற, தன் ஆதங்கத்தையும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
டான் பிரவுன் எழுதிய, ‘டா வின்சி கோட்’ நாவல் பற்றி விவரித்த ஆசிரியர், உண்மையும் கதையும் கலந்த நாவல்கள், இரண்டையும் விட சுவையானவை; துரதிர்ஷ்டவசமாக, தமிழில் இத்தகைய நூல்கள் இல்லை என, சுட்டிக் காட்டுகிறார்.
யதேச்சையாக வாங்கிய, ‘பாங்கிரப்ட்’ ஆங்கில நாவல், தன்னை முழுமூச்சில் படிக்க வைத்தது. அதை எழுதியவர், ரவி சுப்பிரமணியம் என்ற இந்தியர் என ஆச்சரியப்படுகிறார். தமிழில் நாவல்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பிரதிபலிப்பு இந்த நூல்!  
-சி.கலாதம்பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us