பாரதிராஜாவின் படைப்புகள் உடன்பாட்டு முறை, எதிர்மறை முறை என இரு வகைகளிலும் மனிதநேயம் பற்றிச் சொல்கின்றன. இனிக்கும் வெல்லக்கட்டி முன்னது; கசப்பு தடவிய வெல்லக்கட்டி பின்னது. வீணையின் தந்திகள் பலவாக இருப்பினும், மீட்டலில் ஒரே ராகம் இசைப்பது போல், காட்சிகளும் நிகழ்ச்சிகளும் வேறு வேறு என்றாலும், மாட்சி மிகுந்த தொனிப்பொருள் மனிதநேயம் என்பதை தன் திரைக் காவியங்களில் பாரதிராஜா பதிவு செய்துள்ளதை சொல்கிறது இந்நுால்.