முகப்பு » இசை » காலங்களில் அவன் வசந்தம்

காலங்களில் அவன் வசந்தம்

விலைரூ.300

ஆசிரியர் : இசைக்கவி ரமணன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
கவிஞர் கண்ணதாசனின் பெருமைகளை பாடல்களின் மூலம் ஆய்வு முறையில் விளக்கியுள்ள நுால். கவிதை, திரை இசைப்பாடல் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். மனிதர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நற்பண்புகளையும், வேண்டாத தீய குணங்களையும் தன் கவிதைகளில் கூறிச் சென்றவர்.

கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கூறி, அதற்கு இணையாக தமிழ் இலக்கியத்தில் வருகிற செய்யுள் வரிகளை ஒப்புமைப்படுத்தியுள்ளார். சங்க இலக்கியங்கள், திருக்குறள், பாரதியாரின் பாடல்களுடன் கண்ணதாசனின் பாடல்களை இணைத்துப் பேசியுள்ளார்.

நிலையாமை, தன்னம்பிக்கை குறித்து கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளுக்கு நுால் ஆசிரியர் சிறந்த ஒப்புமைகளைக் காட்டியுள்ளார். ஒவ்வொரு பாடலையும் வியந்து, புகழ்ந்து பேசுகிறது.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வாழ்த்து கவிதையும் எழுதியுள்ளது சிறப்பு. கவிஞர் கண்ணதாசனைப் பற்றி பிரபலமானவர்கள் கூறிய கருத்துகளையும் நுால் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். கண்ணதாசனின் பெருமைகளை அனைவரும் அறியும் வண்ணம் செய்துள்ள நுால்.

முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us