குமாரதேச நாட்டு அரசன் அதிரதன், 80 வயதான நிலையில் ஒரே மகன் குந்தளனுக்குப் பட்டம் கட்டி விடலாம் என்ற விருப்பம் நாவலாக வடிக்கப்பட்டுள்ளது. குந்தளன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் திருமணத்தையும், முடிசூட்டுதலையும் ஒரே நிகழ்ச்சியாக நடத்த விரும்பினார் மன்னர். அவருடைய ஆட்சிக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னன் மகள் வைசாலியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.
நாள், நட்சத்திரம் பார்த்து எதிர்கால ராணியைக் காவலில் வைக்க சொல்லிவிடுகிறார் ஜோதிடர். இப்படி திருப்பம், கேலிக்கூத்துடனும் செல்கிறது கதை. 46 அத்தியாயங்களில் அங்கங்கே திருக்குறள் கருத்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
நகைச்சுவையை தெளித்து பொழுதுபோக்கு என்ற வகைக்குள் அடங்கப்பட்டுள்ளது. கற்பனையான பாத்திரங்களுடன் ராஜா, ராணி கதை உருவாக்கப்பட்டு உள்ளது. கவரும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்