சமூகத்தின் மீதான அக்கறையையும், தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்ற வேட்கையையும் இயல்பாக வெளிக்கொண்டு வந்துள்ள நாடக நுால். சமூக அவலங்களை களைந்தெறிந்து, இளைய சமூகம் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மாறுதல் வரவேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
தடுமாறிப் போகும் இளைஞர்களை, நல்வழிப்படுத்தி, நாட்டுப் பற்றுடைய ஆற்றல்மிகு சக்திகளாக ஆக்கும் பாத்திரங்கள் உள்ளன. சமூகத்துக்காக பாடுபடுவோர் இன்னல்களையும், தியாகங்களையும் காட்சிப்படுத்துகிறது.
– வி.விஷ்வா