பேராசிரியர் க.ப.அறவாணன் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் நுால் வாசிப்பை ஊக்குவிப்பதில் செய்த பங்களிப்புகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். கருத்துகள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளதைக் காண முடிகிறது.
கல்வி, நுாலகங்கள் மற்றும் வாசிப்பு சார்ந்து தரப்பட்டுள்ள பழைய புள்ளி விபரங்களை தற்காலத்துடன் பொருத்திப் படிப்பது சிறந்தது. வாசிப்பை பெருக்குவதற்கான வழிமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் உள்ள வாசிப்பு அளவை எடுத்துக் காட்டியிருப்பதால். நம் நாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனா போன்ற நாடுகளில் உள்ள கல்வி முதிர்ச்சியும், வாசிப்புப் பழக்கமும் வெளியிடப்பட்டுள்ள கலைக் களஞ்சியங்கள் விபரமும் தரப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வாசிக்க வாங்க எனும் நுால் வாசிப்பு இயக்கத்தின் செயல்பாடுகளும் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டு உள்ளன.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு