முகப்பு » ஆன்மிகம் » பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆன்மிகச் சிந்தனைகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆன்மிகச் சிந்தனைகள்

விலைரூ.250

ஆசிரியர் : நரேந்திர மோடி

வெளியீடு: செந்தில் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இறை வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கனடாவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். ‘ஒன்றுபட்டதே வலிமையான பாரதம்’ என்ற பகவான் ராமகிருஷ்ணரின் போதனை அடிப்படையில் அமைந்துள்ளது.

துறவிகள் விஜ்னாநந்தா, ஆத்மஸ்தானந்தா, ஆதிசங்கரர், விவேகானந்தர் ஆகியோரது உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. யோகா என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கு உரியது; அது வாழ்வின் ஒரு பகுதியாக இன்றி, நம் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டதாக பெருமிதம் கொள்கிறார்.

காலத்துக்கு ஏற்ப புதிய எண்ணங்களை வரவேற்ற துறவிகள், வரலாற்றையே மாற்றத்தக்க பெரிய காரியங்களை செய்துள்ளனர் என்பது போன்ற ஆன்மிக கருத்துகளை பொழிந்துள்ளார். ஆன்மிக அன்பர்களுக்கு அரிய பொக்கிஷம்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us