கவிதையில் பயணிக்கும் அனுபவத்தை கட்டுரைகளால் விளக்கும் நுால். வாசித்த சிற்றிதழ்கள் துவங்கி, தனித்தொகுப்பு நுால்களில் உள்ள சிறந்த கவிதைகளை அறிமுகப்படுத்துகிறது. நிலக் கொள்ளை வலியை உணர்த்தும் கதிர் பாரதியின், ‘சியர்ஸ்’ கவிதையும், இயற்கையை ஆராதிக்கும் கல்வி முறை அவசியத்தை வலியுறுத்தும் ஐந்துக்கும் ஏழுக்கும் மத்தியில் கவிதையும் விவரிக்கப்பட்டுள்ளன.
கடவுள் குறித்தும், வேத மந்திரங்கள் குறித்தும், ‘பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன’ என்ற கவிதை பேசும் விதம் அழகு. எது கவிதை என்பதில் துவங்கி, எவ்வாறு அணுகுவது என்பது வரையிலான கேள்விகளுக்கு பதில் சொல்லும் நுால்.
–
சையத் அலி