மழலை மகளை ரசித்த கணங்களை அனுபவமாக விவரிக்கும் நுால். தனியாக உறவுகளிடம் காட்டும் குதுாகலம், வெளியிட சந்திப்புகளில் ஏற்படும் மவுனத்தை காட்சியாக பதிய வைக்கிறது.
வீட்டை உலகமாக சுற்றி, பெரியவர்களை குழந்தையாக மாற்றுவது பற்றி பேசுகிறது. தலைமுறை தலைமுறையாக வரும் குழந்தை கதைகளை, ஒன்றரை வயதுக்குள் சொல்லியதாக ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால்.