பரபரப்பான கொலை வழக்குகளை அலசும் நுால்.
சென்னை வங்கி மேலாளர் கொலையில் போலீசாரின் தேடலை விவரிக்கிறது. மனைவியை காரில் இருந்து தள்ளிக் கொன்ற மனநலம் பாதித்தவர் வழக்கின் தீர்ப்பு குறித்தும் கூறுகிறது. தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசி வழக்கில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது.
கொலைக்கான காரணம், பின்னணி, துப்பு துலக்கிய விதம், விசாரிப்பு முறை, குறுக்கு விசாரணை, நீதிமன்ற உத்தரவு என விரிவாக அலசுகிறது. கிரைம் கதை எழுத முயல்வோருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்