முகப்பு » கதைகள் » உதிரும் வேர்கள்

உதிரும் வேர்கள்

விலைரூ.150

ஆசிரியர் : க.அம்சப்ரியா

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சாமானிய மனிதர்களின் நெஞ்சங்களில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை, இயல்பான சொற்கள் வழியே வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களை பாத்திரங்களாகக் கொண்டு வாழ்க்கை பிரச்னை, குடும்ப சிக்கல், சமுதாய அவலங்கள், குழந்தை தொழிலாளர் என கதைகளங்கள் நீள்கின்றன.

அடங்கி கிடந்த அன்னையரின் மன அழுத்தங்களும், எழுச்சியும் பீறிடுவதைக் காண முடிகிறது. முதல் காதலை மூடி வைத்து அடை காக்கும், ‘குடையும்’ என்ற கதையும், நிறைவேறாத காதல் பொசுங்கியதை, ‘சாம்பல்’ கதையும் வெளிப்படுத்துகின்றன. முதலாளி தொடர்வதை, ‘வெளிச்சத்திற்கு வெளியே’ என்ற கதை விவரிக்கிறது. பெண்களின் அவலநிலையை சுட்டிக்காட்டி மனித நேயத்தை வலியுறுத்தும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us