துாக்கத்தின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தும் அற்புத நுால். மனிதனுக்கு காற்றும், துாக்கமும் மிகவும் இன்றியமையாதவை என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
தொடர்ந்து பல நாட்கள் துாக்கம் வராவிட்டால் அது மனநோயின் அறிகுறி என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. யோகாசன கலையை பின்பற்றி பயிற்சி செய்து துாக்கம் பெற வழி வகைகளை சொல்கிறது. ஆழ்மன சிகிச்சை வழியாக நன்மை பெறலாம் எனவும் தெரிவிக்கிறது.
துாக்கம் பற்றி, 24 தலைப்புகளில் விரிவாக தெரிவிக்கிறது. ஆரோக்கியமாக வாழ வழிகாட்டுகிறது. படிக்க வேண்டிய நுால்.
– புலவர் ரா.நாராயணன்