குறளமுது

விலைரூ.120

ஆசிரியர் : முனைவர் ரத்னமாலா புரூஸ்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
அவசர காலத்துக்கு உதவும் குறளுக்கு ஏற்ற குறிப்புரையாக அமைந்துள்ள நுால். ஏழு சீரில் எழுதிய குறளுக்கு, எட்டு சொல்லில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

‘படித்திருந்தும், பகுத்தறிந்து இறைவன் பாதம் தொழாதவர், கற்றதனால் என்ன பயன்’ என கேட்கிறது. இல்வாழ்க்கை அதிகாரத்தில், இயல்புடை மூவர் என்ற குறளுக்கு பெற்றவர், மனைவி, மக்கள் என விளக்கப்பட்டுள்ளது.

அடக்கமுடைமையில், ‘அமரருள்’ என்பதற்கு தேவருலகம் என்பதே சரி. ஆனால், ‘ஆரிருள்’ என்பதற்கு நரகம், இருள் உலகம் என கூறாமல், பாதாளம் என சொல்லப்பட்டு உள்ளது. ஆகூழ் என்பது பொருள் சேர்க்கும் விதி என்றும், போகூழ் என்பது கெட்ட விதி என்றும் கூறப்பட்டுள்ளது. குறுகிய உரையுடன் வந்துள்ள குறளமுது அறத்துப்பால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us