மாணவர்களை வாழ்வில் மேன்மைபடுத்தும் சிந்தனை நுால். மாணவப்பருவம் எவ்வளவு மகத்தானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து, அந்த பருவம் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் குறித்து அறிவுறுத்துகிறது. அவற்றை எளிதாக கடந்து செல்லும் வழிமுறைகளை வகுத்து தருகிறது.
தொடர்ந்து, படிக்கும் இடத்தில் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவம், ஆளுமை திறனை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவிக்கிறது. தன்னம்பிக்கையை பெருக்கி, வாழ்வை திறம்பட எதிர்கொள்வது குறித்து அறிவுரைகளை சொல்கிறது.
உணவில், நட்பு வட்டாரத்தில் கவனம் செலுத்துவது குறித்தும் தெளிவு ஏற்படுத்தும் வகையிலான நுால்.
– ராம்