தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் பாரதிராஜாவின் வாழ்வை பேசும் நுால். ஸ்டுடியோக்களில் செயற்கை கூடாரம் அமைத்து படமாக்கிய சூழலில், கதைக் கருவின் மண்ணுக்கே சென்று படம் பிடித்ததை கண் முன் நிறுத்துகிறது.
ஆரம்ப வாழ்க்கை, வாசிப்பு பழக்கம், கற்பனை திறன், நாடக அனுபவம், இளையராஜா சகோதரர் பாஸ்கர் மீதிருந்த நட்பு, சென்னை வாழ்க்கை குறித்து விரிவாக அலசுகிறது. அரசியல் படங்களை விமர்சன கண்ணோட்டத்தில் பேசுகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஜாதிய படிநிலைகள், கவர்ச்சியின் எல்லையை கிராமிய கண்ணோட்டத்தில் பேசுகிறது. உதவிய நுால்கள் குறித்த பட்டியல் உள்ளது. திரைத்துறையில் நுழைய ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– -டி.எஸ்.ராயன்